ஆர்க்கும் கரையிலிருந்து
தொலைவில்
வெகுதொலைவில்
பழக்கமான மௌனத்தில்
விழுந்து மிதக்கிறது
ஆழிமழை
மின்னி மறைந்து கொண்டிருந்தது
இருளின் பரப்பை
பழகவிடாத ஒளிக்கத்திகள்
இயல்பாய் இருப்பதென்பதாய்த்தான்
சற்றே கவனங்கள் சிதறுவதை
கவனிப்பதுவும்
---------------------------------------------------
வருடங்கள் மிகுத்து
கிளை பரந்தும்
வேர்பரவா மரமதென்று
உறங்காதென்று
வணங்கி நிமிர்ந்து பின்
புழுவாகி பாம்பாகி
மரமாகியோ
சாபம் தீரவோ
காத்திருந்த மரத்தின்
நினைவுக்கென்று
பட்டை உரித்தார்
உய்விக்க வந்த
கடவுளோ இவர்?
தொலைவில்
வெகுதொலைவில்
பழக்கமான மௌனத்தில்
விழுந்து மிதக்கிறது
ஆழிமழை
மின்னி மறைந்து கொண்டிருந்தது
இருளின் பரப்பை
பழகவிடாத ஒளிக்கத்திகள்
இயல்பாய் இருப்பதென்பதாய்த்தான்
சற்றே கவனங்கள் சிதறுவதை
கவனிப்பதுவும்
---------------------------------------------------
வருடங்கள் மிகுத்து
கிளை பரந்தும்
வேர்பரவா மரமதென்று
உறங்காதென்று
வணங்கி நிமிர்ந்து பின்
புழுவாகி பாம்பாகி
மரமாகியோ
சாபம் தீரவோ
காத்திருந்த மரத்தின்
நினைவுக்கென்று
பட்டை உரித்தார்
உய்விக்க வந்த
கடவுளோ இவர்?