July 23, 2014

புன்னகை


புன்னகை

எப்போதும் 
கையோடு தான் வைத்திருப்பது 
செப்படி வித்தை தெரிந்தவராய் 
கையிலிருப்பதை அறிகிறார்கள்
வாராக்கடனாய் அதும் சென்றுவிடுகிறது

பிம்பங்களை உருவாக்காமல்
ஊடுருவிச் செல்லும் போது 
இரட்டிப்பாவதில்லை
 
அரவமற்றதும் 
ஒளியற்றதுமான பொழுதுகளில் 
கதவிடுக்கில் மேஜைகளுக்கடியிலிருந்து 
அது க்ரீச்சிட்டிக்கொண்டிருக்கும்
அதன் பெயர் அதிர்ஷ்டம்

----------------------------------------------------------------

 
நாட்களாய் படிந்து விட்ட
அலமாரியின்   தரையழுந்திய ஓரங்களும்
கட்டிலின் பாதங்களும்
விட்டுச்சென்ற சுவடுகள்

சற்றும் பொருத்தமற்ற
எம் புதிய அலமாரிகளின்
நீளத்தில் நீளம் மறைந்தாலும்
அகலத்தில்
பழங்கதையின் சில பக்கங்கள்

ஏதும் எழுதிச்செல்லாத
கூரைகளில் சுழலும் விசிறியின்
உராய்விலிருந்து
இறங்குகிறது ஒரு கதை

சுவர்களிலிருந்து
புதியகதையில் இல்லாத
பிஞ்சுக்கைகள் அழைக்கிறது

No comments: